Thursday, 27 September 2012

உதயத்தின் மலர்ச்சியே !..


சுவாசமே !..
உதயத்தின் மலர்ச்சியே !..
மணம் சொரிந்து துவழும்
மென்மையே...
மென்மையின் வார்ப்பாம்
வர்ண கோலங்கள்
வருடல்கள்...இதமாம்
உனக்குள்
படர்ந்துச் சிறக்கும்
அவளின் சுவாசங்கள்
தழுவிப் புலரும்
உயிர் மூச்சு...
மாலை மயக்கும் வேளை
மயிலிறகு மஞ்சம்
உன்னில் தனை இழந்து
அவளில் இழைந்திருக்க...
நட்சத்திரங்கள்...ஏனோ...
கண்சிமிட்டி நகைத்தன
தென்றலோ
ஏதுமறியாது
விழித்துக் கொண்டிருந்தான்.

சிறகுகளே துணையாய்


விழிகளில்
காதல் பனித்திருக்க
பசுமையாய்...
நினைவுகள் வருட
வசந்தத்தின் விளிம்பில்
சிறகுகளே துணையாய் 
அந்த நந்தவன மாளிகை யில்
மன்னவன் வரவிற்காய்
மண்டியிட்டுக் கிடந்தனையோ !..    

நீயாய்… இருப்பாயென.


கல்லுக்குள் உணர்வு
பேசும் மொழி   
கேட்டுணர்தல்
உருமாறும் அழகு.
அந்த நீரின்  தன்மை
குளிர்வு...வெப்பம்
தாகம்...தவிப்பு
வர்ண மாற்றங்கள்.
மேகத் தோற்றம்
மாயை...நிஜம்
ஒளிச் சிதறல்கள்...
தனித்துவமாய்
நிலையாய்
நீயாய்… இருப்பாயென.
உயிரே!...
உன்னை ஆராதித்தேன்
மனதையல்லவா நேசித்தது
மனதைத்தான்
அழகில் உருகியன்று.
புரியவைத்தாய்
நீ...நீயல்ல…

விழித்திருந்தும் குருடர்கள்


இரவில் விழித்திருந்து
பயிர்க் காத்து
உயிர்க் காத்து
விவசாயிகளின் தோழனாய்
ஆந்தை நண்பா !
செய்த நன்மைக்காய்
தூக்கிலிடப் படுவது
புதிதன்று...
சரித்திரத்தைப் புரட்டிப்பார்
மனிதனுக்கும்
பார்வைக் கோளறுதான்
உன்னைப் போலவே
விழித்திருந்தும் குருடர்கள்
மானுடத்திற்கு
நன்மை செய்தும்
நீ...சுமக்கும்
அவப்பெயர்...
அக்கினிப் பிரவேசங்கள்
இன்றல்ல
தொன்று தொட்டு...
என்று தனியும் இப்பொய்மைகள்

சுவாசங்களே ஒளியாய்...


நீ...
பூத்துக்  கிடந்த வேளைதனில்
துயில்  கொண்ட
மடியின் செழிப்பெங்கே ?...
மென்வருடல்
சுகந்தமெங்கே ?...
மணம் வீசி சொக்கவைத்த
மதி முகமெங்கே ?...
மையல் கொண்ட ஒளியெங்கே ?...


பிரியமானவளே !
உன் சுவாசங்களே
உனக்கு ஒளியாய்...
பாதச்சுவடுகள் வழிகாட்டியாய்
இழந்தவைகளைத் தேடி
மீண்டும் பயணித்து விட்டாய் !...
உன்னை நினைத்து
எத்துனைப் பெருமை.