Wednesday, 25 July 2012

கலைத்தேன் கவித்தேன்


பார்த்தேன் உணர்ந்தேன்
பார்வையில் திளைத்தேன்
மனம்தேன் மலைத்தேன்
மணந்தேன் உயிர்த்தேன்.

இடைத்தேன் இழைத்தேன்
இதழ்தேன் மலர்ந்தேன்
விழித்தேன் படித்தேன்
மொழித்தேன் சுவைத்தேன்

சுவைத்தேன் கொடுத்தேன்
சுனைத்தேன் நனைந்தேன்
நினைத்தேன் பனித்தேன்
நிலைத்தேன் நீர்த்தேன்.

கலைத்தேன் கவித்தேன்
கனித்தேன் கணிந்தேன்
பயிர்த்தேன் பசித்தேன்
திளைத்தேன்  தொலைந்தேன்.

                                                      
                                   --மு. ஆ. பீர்ஒலி.
   


No comments:

Post a Comment